இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலத்தை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!!

இந்தியாவின் மிக நீண்ட கடல் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது. சுமார் 22 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

நாட்டிலேயே 22 கிலோ மீட்டர் நீளம் உள்ள மிக நீண்ட கடல் மேம்பாலத்தை, மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

மும்பையில் கட்டப்பட்டுள்ள கடல் பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் ஆகும்.

27வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்க மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, பிற்பகல் 3.30 மணி அளவில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தை திறந்து வைத்து, அதில் பயணம் செய்ய உள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பாலம், 17, 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

16.5 கிலோ மீட்டர் கடலிலும், 5.5 கிலோ மீட்டர் நிலத்திலும் அமைந்துள்ள மேம்பாலத்தின் மூலம், மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான தூரம் வெகுவாக குறையும்.

மேலும், மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் விரைவான இணைப்பை வழங்கும் என கூறப்படுகிறது.

மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரமும் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments