தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 413 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, இந்த பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/12/image-71.png)
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்காக நடத்தப்பட்ட முதன்மை தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்பொழுது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து TNPSC தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வின் மூலமாக கூடுதலாக 620 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 5 ஆயிரத்து 860 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அறிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.