கேஸ் சிலிண்டர் மானியம் வேண்டுமா? இதை செய்தால் போதும்.. மோடி அரசின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் சிலிண்டர் உபயோகப்படுத்துபவர்களுக்கு சிலிண்டர் மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தாதவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம். பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்தும் இந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் அரசு சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான பயனாளிகள் உள்ளனர். சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கட்டாயம் KYC அப்டேட் செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இவர்களால் மட்டுமே மானியம் பெற முடியும்.

ஆனால் இதை பலரும் செய்யவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு இறுதி தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குள் இதை செய்து முடித்தால் தான் உங்களால் சிலிண்டர் மானியம் பெற முடியும்.

மார்ச் 31 ஆம் தேதிக்குள் நீங்கள் கேஸ் சிலிண்டரில் KYCஐ புதுப்பிக்கவில்லை என்றால், மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு மானியம் கிடைக்காது.

இந்த KYC செய்ய இரண்டு முறைகள் உள்ளன. முதலில் எரிவாயு ஏஜென்சி அலுவலகத்தில் இருந்து ஆஃப்லைன் முறையில் செய்யலாம்.

அல்லது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் வீட்டில் அமர்ந்து ஆன்லைனில் KYC அப்டேட் செய்யலாம்.

முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான க்குச் செல்லவும். இப்போது உங்கள் எரிவாயு இணைப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது ஹெச்பி, இந்தியன் மற்றும் பாரத் கேஸ் நிறுவனங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தைக் கிளிக் செய்யவும்.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எரிவாயு நிறுவன இணையதளத்தில் KYC க்குச் செல்லவும். அதன் பிறகு இங்கே ஒரு படிவம் திறக்கும்.

அதில் மொபைல் எண், வாடிக்கையாளர் எண் மற்றும் எல்பிஜி ஐடியை நிரப்பவும். அதன் பிறகு ஆதார் சரிபார்ப்பு OTP உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதை உள்ளிடுவது உங்கள் KYC ஐ நிறைவு செய்யும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments