தமிழகத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நிவாரணத்தொகை:
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 37 லட்ச ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்களும் நிவாரணத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் இருந்து ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மட்டுமே 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் பின்னர், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.