You are currently viewing 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும்

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும்

2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டிகள் கருதப்படுகின்றன. கிரிக்கெட் போட்டிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் இந்த போட்டி 1900 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் இடம்பெறாமல் இருந்து வருகிறது. இதனை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தியா வந்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச், ஒலிம்பிக்கில் கிரிக்கெட், பேஸ்பால், சாஃப்ட் பால், ஃப்ளாக் கால்பந்து, லேக்ரோஸ், ஸ்குவாஷ் போட்டிகள் 2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் இந்த அனைத்து போட்டிகளும் 2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகள் டி20 முறையில் நடைபெறும்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்கு முக்கிய காரணம் விராட் கோலிதான். விராட் கோலிக்கு சமூக ஊடகங்களில் 340 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். உலகில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் விளையாட்டு வீரர்களில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. அவரின் இந்த எண்ணிக்கை டைகர் வூட்ஸ், லெப்ரான், டாம் பிராடி ஆகியோரின் ஒருங்கிணைந்த எண்ணிக்கையை விட அதிகமாகும். கிரிக்கெட்டை லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இணைப்பதற்கான முக்கிய காரணமாக விராட் கோலி இருக்கிறார். இது லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கின் மிகப்பெரிய வெற்றி” என கூறினார் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுக்குழு இயக்குநர் நிக்கோலோ காம்ப்ரியானி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments