You are currently viewing கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் திரௌபதி முர்மு

கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் திரௌபதி முர்மு

சென்னைக்கு 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார்.

பெங்களூரிவிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் மூலம் சென்னைக்கு இன்று மாலை வந்தார். சென்னைக்கு விமானம் மூலம் வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வரவேற்றனர்.

அப்போது, மணிமேகலை புத்தகத்தின் ஆங்கில பதிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதிக்கு  வழங்கினார். மேலும், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் குடியரசு தலைவருக்கு வரவேற்பளித்தனர்

இந்நிலையில், சென்னை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை கலந்துகொள்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments