- தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்ததால் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்:
- தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான குடும்பங்கள் மொத்த உடைமைகளையும் இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர்.
- இது போக, தென்மாவட்டங்களில் அதிகளவில் வயல் பரப்பு இருக்கும் என்பதால் மொத்த பயிர்களும் சேதமடைந்து விட்டது.
- இதனால், இழந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் தொடர் மழை காரணமாக அங்கு விளைந்த சின்ன வெங்காயம் அனைத்தும் சேதமடைந்துள்ளது.
- இது போக, பல பயிர்களை நோய்கள் தாக்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- இதனால், இழந்த பயிருக்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.