தமிழகத்தில் தொடர்மழையால் பயிர்கள் சேதம் – ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம்!! வலுக்கும் கோரிக்கை!! 

  • தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்ததால் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்:

  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான குடும்பங்கள் மொத்த உடைமைகளையும் இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர்.
  • இது போக, தென்மாவட்டங்களில் அதிகளவில் வயல் பரப்பு இருக்கும் என்பதால் மொத்த பயிர்களும் சேதமடைந்து விட்டது.
  • இதனால், இழந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் தொடர் மழை காரணமாக அங்கு விளைந்த சின்ன வெங்காயம் அனைத்தும் சேதமடைந்துள்ளது.
  • இது போக, பல பயிர்களை நோய்கள் தாக்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
  • இதனால், இழந்த பயிருக்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments