
PMMY: இளைஞர்கள் மத்தியில் தொழில் தொடங்கும் எண்ணத்தை அதிகப்படுத்த மத்திய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை கொண்டுள்ளது.
Pradhan Mantri Mudra Yojana:
இந்தியாவில் இளைஞர்களின் திறனை அங்கீகரிக்கும் வகையில், இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பதில் கவனம் செலுத்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தன பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY).
இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் தொழில்களை துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது ஆகும்.
கூடுதலாக, இந்தத் திட்டம் வணிக விரிவாக்கத்திற்காக நிதி தேடும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு உதவுகிறது.
பல கடன் திட்டங்களை போலல்லாமல், PMMY கார்ப்பரேட் அல்லாத மற்றும் விவசாயம் அல்லாத நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது. PMMYன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது பிணையமில்லாத கடன்களை வழங்குகிறது.
பொதுவாக வங்கிகளில் கடன் வாங்கும் போது, சொத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். PM முத்ரா கடன்கள் இந்தத் தேவையை நீக்கி, கணிசமான சொத்துக்கள் இல்லாத தனிநபர்களுக்கு நிதி உதவியைப் பெற ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
கடன் வகைகள் மற்றும் வரம்புகள்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூன்று வகைகளில் கடன்களை வழங்குகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு நிதித் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஷிஷு கடன்: ரூ. 50,000 வரை நிதி உதவி.
கிஷோர் கடன்: ரூ. 5 லட்சம் வரையிலான கடன்கள்.
தருண் கடன்: அதிக கடன் வரம்பு, ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
கடன் பெற தகுதிகள்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனாக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
மேலும் இதற்கு முன் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்க கூடாது. மத்திய அரசின் முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்போர் கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் சரியான வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதே போல விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
PMMY கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
mudra.org.in என்ற அதிகாரப்பூர்வ முத்ரா யோஜனா இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளின் அடிப்படையில் கடன் வகையைத் (ஷிஷு, கிஷோர் அல்லது தருண்) தேர்வு செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை துல்லியமாக பூர்த்தி செய்து, ஆதார் அட்டை, பான் கார்டு, நிரந்தர மற்றும் வணிக முகவரிக்கான சான்று, வருமான வரி ரிட்டர்ன் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உங்கள் அருகிலுள்ள வங்கியில் சமர்ப்பிக்கவும். வங்கி உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, ஒரு மாதத்திற்குள் கடன் அனுமதிக்கப்படும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை விரும்புவோருக்கு, முத்ரா லோன் இணையதளத்தில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குவது எளிதாக உள்நுழைவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உதவுகிறது.