டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது!!!

  • கூகுள் பே, ஃபோன்பே, பாரத் பே, பேடிஎம் அல்லது வேறு வழிகளில் யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இவற்றில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது.
  • UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். இதன் கீழ் ஐயாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு புதிய எச்சரிக்கை முறைமையை அறிமுகப்படுத்தப்படும்.
  • இதில், ஒரு பயனரோ அல்லது வணிகரோ இந்த தொகையை விட அதிகமாக UPI மூலம் பணம் செலுத்தினால், அவருக்கு அழைப்பு அல்லது SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு இந்த பரிவர்த்தனையை சரிபார்க்கும்படி கேட்கப்படும்.
  • சரிபார்த்த பின்னரே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கான வழிமுறைகள்:

  • நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் சமீபத்தில், Paytm, Phone-Pay மற்றும் Google-Pay போன்ற  பணம் செலுத்தும் வசதிகளை வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் ஆப்ஸ் நிறுவனங்களிடமும் வாடிக்கையாளர்களின் UPI கணக்கு நீண்ட காலமாக ட்யூவாக இருந்தாலோ, அதாவது கட்டப்படாமல் இருந்தாலோ, இதுவரை எந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக செயலில் இல்லாத நிலையில் இருந்தாலோ, அத்தகைய கணக்குகளை வெரிஃபை செய்யும்படி கேட்டுக் கொண்டது.
  • அத்தகைய வாடிக்கையாளர்கள் மீண்டும் KYC செய்ய வேண்டும். அதன் கீழ் வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் சரிபார்க்கப்படும்.
  • டிசம்பர் 31, 2023க்குள் சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், புதிய ஆண்டு முதல் இந்த கணகுகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் UPIஐப் பயன்படுத்த முடியாது.எஸ்ஏபிஆர் (SABR) மோசடி வழக்குகளைத் தடுக்க நிதி அமைச்சகத்தில் சமீபத்தில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இதில் நிதி, வருவாய், நிதி சேவைகள், பொருளாதார விவகாரங்கள் துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய கொடுப்பனவு கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • அரசாங்கத்திற்கு பல முன்மொழிவுகள் வந்துள்ளன, குறிப்பாக UPI மூலம் செய்யப்படும் மோசடி தொடர்பாக பல ஆலோசனைகள் கிடைத்துள்ளன.
  • இதில் புதிய எச்சரிக்கை அமைப்பும் உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

புதிய பயனர்களுக்கு வசதி கிடைக்கும்:

  • இந்த எச்சரிக்கை முறை முதலில் புதிய பயனர்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
  • பின்னர் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் இந்த உடனடி எச்சரிக்கை மற்றும் சரிபார்ப்பு முறையைப் பின்பற்றக்கூடும்.
  • இருப்பினும், பல நிதி நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய அமைப்புகளை செயல்படுத்தியுள்ளன,
  • ஆனால் அதற்கான கட்டண வரம்புகள் அதிகமாக உள்ளன.

சரிபார்ப்பு இந்த முறையில் செய்யப்படும்: 

  • இந்த முறையின் கீழ், ஒரு பயனர் முதல் முறையாக மற்றொரு நபருக்கோ அல்லது கடைக்காரருக்கோ UPI மூலம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போது, அவருக்கு முதலில் சரிபார்ப்பு அழைப்பு வரும் அல்லது SMS அனுப்பப்படும்.
  • இந்த கட்டணத்தை பயனர் அங்கீகரிக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பின் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனுக்குப் பிறகு பணம் செலுத்தப்படும்.
  • ஏதாவது ஒரு நிலையில் சரிபார்ப்பு செயல்முறை தடைபட்டு முடிக்கப்படாவிட்டால், பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

இலட்சக்கணக்கான எண்கள் முடக்கப்பட்டுள்ளன: 

  • ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
  • இதன் கீழ், முதற்கட்டமாக லட்சக்கணக்கான மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் 70 லட்சம் மொபைல் எண்களை அரசாங்கம் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் சிம் கார்டுகள் தொடர்பான விதிகளை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments