மகளிர் உரிமை தொகை திட்டம் ரூ.1000.. புதிய பயனாளிகளுக்கு எப்போது பணம் வரும்? வெளியான தகவல்

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விரிவாக்கத்திற்கான முதல் கட்ட பணிகள் நடப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இனி விண்ணப்பம் செய்பவர்களுக்கு எப்போது தொகை வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விரிவாக்கத்தின்படி கூடுதல் பயனாளிகள் இந்த மாதம் இறுதியில் சேர்க்கப்பட உள்ளனர். அதாவது இன்னும் 7-10 நாட்களில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் தொடங்கும். அதன்பின் பணிகள் முடிந்து அடுத்த மாதம் புதிய பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். அவர்களுக்கான ஓடிபி சோதனைகள் நடக்கும்.

எல்லாம் முடிந்த பின் ஆகஸ்ட் 15ம் தேதி அவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசு தந்த வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments